வெள்ளி, 9 அக்டோபர், 2020

வழி பிறக்கும்

 

முட்டையை உடைத்துக்கொண்டு

முழுமையாய் வெளி வரும்

ஆமை குட்டிகள் எவரின் தயவுமின்றி

ஆழ்கடல் நீரை நோக்கி தனித்தனியே

அடியெடுத்து வைக்கும்

அகிலத்தில் உயிர் வாழ-- அது

அறிந்து கொண்டது எப்படி ?

 

அன்னையின் அரவணைப்போ

ஆண்டவனின் பாதுகாப்போ

கற்றுகொண்ட அநுபவமோ

கல்வி கற்ற அறிவோ, ஏதுமில்லாம

ஒற்றையிலே நடந்து சென்று, நீரை

தொடும் , நீந்தி மகிழும்

யார் கொடுத்த வரம் ?

 

மண்ணில் பிறப்பெடுக்கும்

மானுடக் குழந்தைகளுக்கு

பூமியில் உயிர் வாழ

பெற்றவர்கள் உண்டு

பள்ளி ஆசிரியர்கள் உண்டு

பகவானும் உண்டு

அறிவுக்கு பஞ்சமில்லை

 

எல்லாமுமிருந்தும்

ஏன் இந்த அவல நிலை?

எங்கே குறையுள்ளது?

விதியென்று வாழ்வை வீணாக்காதே

உன்னையே முழுமையாய் நம்பு

துணிந்து செவ்வனே செயல் படு

துயரங்கள் விலகும்,வழி பிறக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக