வெள்ளி, 30 அக்டோபர், 2020

வெற்றி காணும்

 

நிலத்தில் விளைந்த

நெற்கதிர்கள்

முற்றியதும் தலை கவிழும்

மறக்காமல் மண்ணை நோக்கும்

அதுபோல

 

முதிர்வும், பக்குவமும் அடைந்த

மனிதரின் உள்ளம் என்றும்

அடக்கத்துடன் பணிந்து

அமைதியாய் காணும்

எளிமையாய் காட்சி தரும்

 

அன்போடு அடக்கமும்,

அச்சமின்மையும், சமூக நலனும்

இருக்கும் மனதில், நல்ல பண்பு

நிறைந்திருக்கும்அது

பணிவு தரும், வெற்றி காணும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக