ஏன் தாமதம் என்று கேட்பதை
எவரும் விரும்புவதில்லை
சரியான நேரத்திற்கு வர
முயற்சியுங்கள் என்றால்
ஏற்றுக் கொள்வார்கள்-- தாமதத்திற்கு
மன்னிப்பும் கேட்பார்கள்
அடக்கி ஒடுக்குவதால்
எவரையும் எளிதில்
பணிய வைக்க இயலாது --ஒருவரின்
பண்பும், பழகும் தன்மையும்
அன்பான பேச்சும்
காரியங்களை சாதிக்க உதவும்
சரியான அனுகுமுறை தான்
சாதனை படைக்க உதவும்,
நம் மதிப்பையும் உயர்த்தும்
நல்ல மனமும் , பண்பும்,
இனிய சொற்களும் இருந்தால்
இன்பம் தரும் எப்போதும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக