வியாழன், 15 அக்டோபர், 2020

சாமி சும்மா விடாது

 

சாதிகள் எப்போதும்

சமமாக அமராதிருந்தாலும்

சாதிக்க பிறந்ததுபோல்

சிம்மாசனம் ஏறும்

சாதித்துக் கொள்ளும்

 

சாமானிய மக்களைத் தான்

சாக்கடையில் தள்ளி

சாகசம் புரிவதற்கு

சாத்தானாக மாறும்

சன நாயகத்தை சீரழிக்கும்

 

சட்டத்தின் முன் எல்லோரும்

சமமென்று சொன்னாலும்

சரித்திரம்படைப்பதோ

சண்டியரும், அரசியலாரும் தான் ,

சமரசம் பேசுவதோ

சுடலையில் தான்

 

சோற்றுக்கு இல்லாம

சாகும் மக்களிடமா

சொல்லாதிக்கத்தைக் காட்டுவது !

சொன்னால் வெட்கம்

சொல்லாவிட்டால் துக்கம்

சாமி சும்மா விடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக