நாளும் ஒரு போராட்டம்
நடுத்தெருவில் வாசம்
கண்ணிமைகள் மூடாமல்
கனவுகள் தொலைந்ததோ!
கனவு கான சொன்ன
கலாம் அவர்களின்
கண்கள் மூடியதால்—மக்கள்
கனவுகளை மறந்தார்களோ!
உலக முன்னேற்றம்
முடங்காமலிருக்கக்
கருவிலிருக்கும் குழந்தை
கனவு காணுதோ!
கனவுகள் இல்லாமல்
எதிர்பார்ப்பு ஏது?
ஏதிர்பார்ப்பு இல்லாமல்
ஏற்றம் உண்டோ?
புதுப்புது கனவுகள்
பூமியைப் புதுப்பிப்பதால்
மண்ணும், விண்ணும்
மனிதனின் காலடியில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக