அமைதி இருக்குமிடம்
இறைவன் வாழுமிடம்,
ஒரு சிறு புன்முறுவலில்
ஓடி வருவான் இறைவன்
உன்னிடம்
இகழ்பவரை இகழ்ந்திட
அறிவு தேவையில்லை,
அமைதியாயிருங்கள்
அதுதான் அறிவு
அறிவே தெய்வம்
ஆசைக்கும், உணர்ச்சிக்கும்
அடிமையாகாமல்
அறத்தோடு வாழ்ந்தால்
அதுதான் இன்பம்,
இன்பம் அமைதி தரும்
குற்றம் பார்க்கின்
சுற்றம் மட்டுமல்ல
அமைதியும் நிலைக்காது,
உனக்கு அமைதியை
உன்னால் தான் தரமுடியும்
அமைதி வேண்டுமானால்
கண், காதுகளிடம்
கருணை காட்ட வேண்டுங்கள்,
நாக்கை மட்டும் நீட்டாதீர்கள்—அது
அமைதியைக் கெடுத்து விடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக