செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

பாதிப்பு இப்ப அதிகம்




அந்த காலத்தில்
அச்சாணி இல்லாமல்
தேர் ஓடாது
என்பதால் தானோ
அச்சாணியை அகமுடையானோடு
ஒப்பிட்டார்கள்

ஓடும்போது தேரின்
அச்சாணி முறிந்தால்மேலே
அமர்ந்திருப்பவர்களுக்கு
பாதிப்பு ஏற்படும் என்பதால்
பால்ரஸ்,கிரீஸ் உபயோகித்து
புதிய வழி கண்டார்கள்

அச்சாணி அகன்றதுபோல்
அகமுடையானும்
குடிக்கும் பழக்கத்தை
புதிய வழியெனக் கொண்டானோ!
வாழ்க்கை தேருக்கு தான்
பாதிப்பு இப்ப அதிகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக