ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

மனிதம் தழைக்க.




பாட்டி வீட்டுக்கு வந்த பேரன்
பள்ளி விடுமுறை முடிந்து
தன் ஊருக்கு திரும்பி
தனியே போகப்போறான்,
வழியனுப்ப வந்த பாட்டியுடன்
வம்பு பேசிக்கொண்டேசென்றான்

பாட்டியின் கன்னத்தில்
பேரன் முத்தமிட்டான்—இன்னும்
சிறிது நேரத்தில் பேரன்
பிரியப்போகும் துயரம்
பாட்டி மனம் நெகிழ்ந்தது
கண்கள் கலங்கின

பேருந்து நிலையம்
பேரு மட்டுந்தான்—இங்கு
வேறு எதுவும் இல்லை
மரங்களுண்டு, நிழல் தரும்,
மழை வந்தா ஓடிப்போய்
ஊரு சனத்தோடு ஒட்டிக்கனும்

பேரன் பேருந்தில் ஏற
பேருந்து புறப்பட்டது,
போகும் பேருந்தை பார்த்தபடி
பாட்டி புறப்பட்டு போகும்போது
கல் இடறி காலில் உதிரம் கசிய
கண்கள் கலங்கின—புரியல
காரணம் எதுன்னு?

பேரனின் வம்பு பேச்சுக்கள்
செய்த குறும்புகள்
நெஞ்சிருக்கும் வரை—பாட்டிக்கு
நினைவிருக்கும்
இந்த மாதிரி வழியனுப்புதல்
இப்போது இருக்குதா?

மேகம் சுரக்கும் மழை
தாகம் தணிக்கும்,
விழி சுரக்கும் நீர்
வேதனையைப் போக்கி
வழி காட்டும்
மனிதம் தழைக்க



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக