வெள்ளி, 5 ஜூன், 2020

வாழ்வும் தரும்




ஆழ் கடல் எப்போதும்
அமைதியாய் காட்சி தரும்
கரை தொட ஓடி வரும்—வந்து
கட்டித் தழுவும்

ஆழ் கடலில் தான் முத்தும்,
பவளமும் தோன்றும்,
ஆழ் கடல் சொத்துக்கள்
ஆழத்தில் குவிந்து கிடக்கும்

கரையோரத்தில் தான்
கடலின் ஆட்டமும், பாட்டமும்
செத்து ஒதுங்கும் உடலுக்கும்,
செருப்புகளுக்காகவோ !

ஆழ் கடலை விட
அறிவுக் கடல் ஆழமானது
அதை கற்று தேர்ந்தால்
கை நிறைய செல்வமும்,
வளமான வாழ்வும் தரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக