வியாழன், 11 ஜூன், 2020

வாழத்தெரியலையே !



 
வாட்டிடும் வறுமை
வாடித்தவிக்கும் ஏழைகள்
உடனடி இலவசம்
உயிர்களைக் காக்கும்ஆனால்
நிரந்தரத் தீர்வாகுமா?
இல்லை ஏழைகள் எப்போதும்
இப்படியே வாழனுமா?

இதுபோல என்றும்
அப்பாவிப் பெண்களின்
வாழ்வை கெடுக்கும்
வரதட்சனைக் கொடுமை,
அனுதாபப்படும் சமூகம்
அதை அகற்றுவதற்கு
இன்னும் வழி தேடலையே !

கன்னிப் பெண்களின்
கற்பை சூறையாடிக்
கொல்லும் காமுகர்களைக்
கண்டுகொள்ளாததுஅவர்கள்
கங்கையில் புனித நீராடினார்களா ?
அறம் பேசும் நமக்கு
அறத்தின் படி வாழத்தெரியலையே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக