சுவையறியும்
உணவருந்தும்
வாய்க்கு
பேசவும் தெரியும்
இத்தனையும்
இயற்கை தந்த வரங்கள்,
உள்ளிருக்கும் நாக்கோ
கூடா நட்புபோல்
உளறி விடும் சில சமயம்
உதை படும் உடல்
உடை படும் பற்களும்,
சிரசும்
சொல்லுக்கு
வலியுமுண்டு,
வலிமையுமுண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக