வெள்ளி, 5 ஜூன், 2020

கொன்று விடும்




பணியாளனாக
பணி புரிந்தபோது
இவன் கையில்
இருந்தது பணம்

பண்ணையாராக
மாறியபோது
பணத்தின் கையில்
பண்ணையார்

அடிமையாய் பணம்
இவனிடமிருக்கும் வரை
ஆபத்து இல்லைமக்களும்
நல்லவன் என்றார்கள்

பணம் ஒருவனை
அடிமையாக்கினால்
கெடுவதற்கு வழிகாட்டிக்
கொன்று விடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக