பணியாளனாக
பணி புரிந்தபோது
இவன் கையில்
இருந்தது பணம்
பண்ணையாராக
மாறியபோது
பணத்தின் கையில்
பண்ணையார்
அடிமையாய் பணம்
இவனிடமிருக்கும் வரை
ஆபத்து இல்லை—மக்களும்
நல்லவன் என்றார்கள்
பணம் ஒருவனை
அடிமையாக்கினால்
கெடுவதற்கு வழிகாட்டிக்
கொன்று விடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக