புதன், 17 ஜூன், 2020

இயல்பைக் காட்டிவிடும்





வீதியில் நடந்து செல்லும்
வழிபோக்கர்  ஒருவர்
வீதி பெயரை சொல்லி
அவ்வழியே சென்றவரிடம்
வழி கேட்டார்

 அதற்கு அவர்அந்த வீதியா
எந்த முட்டாளைக் கேட்டாலும்
சொல்வார்களேஎன்றார்,
வழிபோக்கரோஅதனால் தான்
உங்களிடம் கேட்டேனென்றார்
இது தேவையா ?

அடுத்தவரை அவமதித்தால்
அசலும், வட்டியுமாக திரும்பும்
என உணர வேண்டும் ,     
பிறரை இகழ்வது
பண்பற்றவனின் செயல்

மல்லிகைப்பூ கடைக்கு
மணமே விளம்பரம்
ஆவதுபோல்
இகழ்ந்து பேசும் பேச்சே
அவரின் இயல்பை காட்டி விடும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக