வியாழன், 11 ஜூன், 2020

மண்ணில் மிதிபடுவது





தெய்வத்திருநாள் உற்சவம்
தெய்வச்சிலையை சப்பரத்தில் ஏற்றி
ஊர்வலமாக தூக்கி சென்ற
ஊரிலுள்ள பக்த கோடிகள்
பஜனை பாடியபடி
ஆடி,பாடி மகிழ்ந்தார்கள்

சப்பரத்தில் வீற்றிருந்த
சாமி சிலை கீழே விழுந்ததை
யாரும் கவணிக்கவில்லை,
ஆட்ட பாட்டத்தில் சாமி சிலை
மண்ணில் கிடந்து மிதி பட்டது
மாயவனின் நிலை பரிதாபமானது

தெய்வத்தின் திருவிழாவில்
தெய்வத்தைத் தொலைத்துவிட்டு
தங்களது உணர்ச்சிகளுக்கு மட்டுமே
அடிமையாகும் ஊருசனம்போலசிலரின்
தன்னல உணர்வால், மக்கள் நலன்
மண்ணில் மிதிபடுவது வேதனை தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக