சனி, 23 ஜனவரி, 2016

காதல்



இதய வீணை
மீட்டும் இன்னிசையில்
நாட்டியமாடும்
தாரகைகளாய்
இமைகள்

பரவசமடையும்
பக்தர்கள்போல்
பக்தியை அமைதியாய்
பகிர்ந்துகொள்ளும்
உள்ளங்கள்

மயங்கும் ஒருபக்கம்
தவிக்கும் மறுபக்கம்
விசித்திரமாய்
விளையாடும்
வனப்பும், நினைப்பும்

அதீத அன்பு
எதனிடம்
பெருக்கெடுத்தாலும்
அதுதான்
உண்மை காதல்

சுகமும், சோகமும்
சேர்த்துத்தரும்
இல்லை
தனித்தனியாய் தந்து
தவிக்கவிடும்

தடைகளை
தகர்த்து முன்னேறும்
முடியாதபோது
சேர்ந்தே
உயிர் துறக்கும்

பண்டு காமம்
தூய காதலாய்
ஏற்கப்பட்டது
இன்று காதல் காமமாய்

கற்பை இழக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக