பிரார்த்தனை
பிராணனை ஒருங்கிணைத்து
மனிதன் உருவாக்கிய
மாபெரும் சக்தி
அளப்பரிய ஆற்றலின்
ஆதாரமையத்தைத் தொடுவதால்
அது சுயசக்தியின்
இருப்பிடமாகத் திகழ்கிறது
ஒருமுகப் படுத்தபட்ட
மனதுக்கு—சாதிக்க
முடியாததென்று
உலகில் எதுவுமே இல்லை
மனத்தை ஒருமித்து
முழு ஈடுபாட்டோடு
மாயவனுடன் ஒன்றிப்போவதே
மெய்யான பிரார்த்தனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக