செவ்வாய், 19 ஜனவரி, 2016

பிரார்த்தனை

பிரார்த்தனை
பிராணனை ஒருங்கிணைத்து
மனிதன் உருவாக்கிய
மாபெரும் சக்தி

அளப்பரிய ஆற்றலின்
ஆதாரமையத்தைத் தொடுவதால்
அது சுயசக்தியின்
இருப்பிடமாகத் திகழ்கிறது

ஒருமுகப் படுத்தபட்ட
மனதுக்கு—சாதிக்க
முடியாததென்று
உலகில் எதுவுமே இல்லை

மனத்தை ஒருமித்து
முழு ஈடுபாட்டோடு
மாயவனுடன் ஒன்றிப்போவதே

மெய்யான பிரார்த்தனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக