வியாழன், 28 ஜனவரி, 2016

மாற்றி சொன்னார்களோ!



காலை வேளையில்
நாயைப் பிடித்துக்கொண்டு
நடை பயணம்
மேற்கொள்ளும் முதியவரிடம்
முன்பின் அறியாத ஒரு
குறும்புக்காரர் கேட்டார்
“நாயோடு கிளம்பிட்டீங்கபோல
நடக்கவா” என்றார்
முதியவர் “ஆமாம்” என்றார்
குறும்புக்காரர் “நான் உங்களைக்
கேட்கவில்லை” என்றார்

அதுபோல
மாடுபிடி விளையாட்டில்
மாடுகளும் மனிதர்களும்
முட்டி மோதிக்கொண்டாலும்
ஆடுகளத்தில்
அதிகம் அடிபட்டு காயப்படுவதும்
மற்றவர்கள் தூக்கிச்செல்வதும்
மனிதர்களேயன்றி மாடுகளல்ல,
குறும்புக்கார மனிதரைப்போல
மாற்றி சொன்னார்களோ, என்னவோ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக