வியாழன், 21 ஜனவரி, 2016

பொது மொழி

பூமியில் பூத்துக்குலுங்கும்
பூக்கள் ஏராளம்
ஒவ்வொரு பூவுக்கும்
ஒப்பற்ற அழகுண்டு, மனமுண்டு
பார்த்து இரசித்தவர்கள் பலர்
பறித்து சூடியவர்கள் ஒருசிலர்
இதுபோலத்தான் மொழிகளும்

முன்னோர்கள் தோற்றுவித்த
மொழிகளில்
எல்லோரும் அறிந்த மொழியாய்
எதுவுமில்லை
வந்த மொழிகளில்—இன்றும்
வாழ்ந்து கொண்டிருப்பது ஒருசில
வாயால் பேசப்பட்டதால்
வரலாறு படைக்கலையோ!

பாரிலுள்ள மக்கள் போற்றும்
பொதுவான ஒரே மொழி
அனைவரும் அறிந்த மொழி
அநுபவத்தில் கற்று தேர்ந்தாலும்
அகராதி இல்லாமலேயே அடிமனதும் அறியும்
அகிலம் உள்ளவரை வாழ்ந்திருக்கும்
இந்த காதல் மொழி அழியாது
கண்கள் பேசுவதால்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக