வியாழன், 21 ஜனவரி, 2016

அருகதை வேண்டும்.

அமைதியாய் உறங்கும்
ஆழ்கடலை தட்டி எழுப்பியதுபோல்
சென்று கொண்டிருந்தது கப்பல்,
சினம் கொண்ட கடல்
செயலிழக்க வைத்ததுபோல் கப்பல்
செல்லமுடியாமல் நின்றது—மாலுமி
சோகத்தில் மூழ்கினார்

அவசரப்பிரிவில் பணிபுரியும்
அரசாங்க மருத்துவர்போல் மாலுமி
அசையாமல் படுத்திருக்கும்
நோயாளிபோல் கப்பல்
நோயை கண்டுபிடித்ததுபோல்
முடிவில் மாலுமி அறிந்தார்
சுக்கான் உடைந்துபோனதை

செல்வாக்குமிக்க பயணி ஒருவர்
பெரிய மருத்துவர்போல்
எல்லாம் கேட்டறிந்தபின்
எங்கே கையுறை என்று கேட்பதுபோல்
சுக்கான் எங்கே என்றார்?
உண்மையை சொன்னார் மாலுமி
“ கடலுக்கடியில் நீருக்குள்” என்று

பயணி எல்லாமறிந்ததுபோல்
எவருக்கும் தெரியப்போவதில்லை
ஏன் இந்த கவலை?
செலுத்துங்கள் கப்பலை என்றார்
ஆறுதல் கூறி அறிவுறுத்தவும்

அருகதை வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக