ஞாயிறு, 19 ஜூன், 2016

செப்டம்பர் பதினொன்று


செப்டம்பர் பதினொன்று
அமெரிக்க நாட்டின்
மானிட இருப்புக்கு
சிதை மூட்டிய கரிநாள்

பழிக்குப் பழியென‌
உள்ளத்தில் உருவான‌
அக்னியை
உருவாக்கி வார்த்ததில்
நெடிதுயர்ந்த‌
கட்டிடத்தின் உச்சியில்
தீப்பிழம்பு

நெஞ்சங்கள்
பதைபதைக்க‌
உல‌க‌மே ஓல‌மிட‌
ச‌ரிந்து,விழுந்து
புதைந்த‌து
ம‌னித‌ உயிர்க‌ளோடு

க‌ட்டிட‌த்தோடு
உட‌ன்க‌ட்டை ஏற‌
அப்பாவி ம‌னித‌ர்க‌ளை
அழித்த‌து
நியாய‌மா?

உயிர‌ற்ற‌ உட‌ல்க‌ள்
எரிக்க‌ப்ப‌டும்- இல்லை
புதைக்க‌ப்ப‌டும்
ம‌த‌ங்க‌ள் ஏற்றுக்கொண்ட‌
ம‌ர‌பு இது

இங்கு
உயிரோடு உட‌ல்க‌ள்
சிதை வைத்து
புதைத்த‌து
ம‌னித‌ ம‌ர‌பை
மாற்றிய‌மைத்த‌ செய‌ல்
நியாய‌மா?

ஏன் இந்த‌க்
கொலைவெறி
அட‌க்கி ஆள‌ நினைக்கும்
ஆண‌வ‌மா?
அட‌ங்க‌ம‌றுத்து
மாற்றுவ‌ழி தேடும்
தீவிர‌வாத‌மா?

காய‌ம்ப‌ட்ட‌
சிறுபுழுகூட‌
திருப்பி க‌டிக்கும்போது
ஏனிந்த‌ ப‌கையுண‌ர்வு?
ஒன்றுப‌டுவோம்
தீவிர‌வாத‌த்தை ஒழிக்க‌
பாடுப‌டுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக