செப்டம்பர் பதினொன்று
அமெரிக்க நாட்டின்
மானிட இருப்புக்கு
சிதை மூட்டிய கரிநாள்
பழிக்குப் பழியென
உள்ளத்தில் உருவான
அக்னியை
உருவாக்கி வார்த்ததில்
நெடிதுயர்ந்த
கட்டிடத்தின் உச்சியில்
தீப்பிழம்பு
நெஞ்சங்கள்
பதைபதைக்க
உலகமே ஓலமிட
சரிந்து,விழுந்து
புதைந்தது
மனித உயிர்களோடு
கட்டிடத்தோடு
உடன்கட்டை ஏற
அப்பாவி மனிதர்களை
அழித்தது
நியாயமா?
உயிரற்ற உடல்கள்
எரிக்கப்படும்- இல்லை
புதைக்கப்படும்
மதங்கள் ஏற்றுக்கொண்ட
மரபு இது
இங்கு
உயிரோடு உடல்கள்
சிதை வைத்து
புதைத்தது
மனித மரபை
மாற்றியமைத்த செயல்
நியாயமா?
ஏன் இந்தக்
கொலைவெறி
அடக்கி ஆள நினைக்கும்
ஆணவமா?
அடங்கமறுத்து
மாற்றுவழி தேடும்
தீவிரவாதமா?
காயம்பட்ட
சிறுபுழுகூட
திருப்பி கடிக்கும்போது
ஏனிந்த பகையுணர்வு?
ஒன்றுபடுவோம்
தீவிரவாதத்தை ஒழிக்க
பாடுபடுவோம்.
அமெரிக்க நாட்டின்
மானிட இருப்புக்கு
சிதை மூட்டிய கரிநாள்
பழிக்குப் பழியென
உள்ளத்தில் உருவான
அக்னியை
உருவாக்கி வார்த்ததில்
நெடிதுயர்ந்த
கட்டிடத்தின் உச்சியில்
தீப்பிழம்பு
நெஞ்சங்கள்
பதைபதைக்க
உலகமே ஓலமிட
சரிந்து,விழுந்து
புதைந்தது
மனித உயிர்களோடு
கட்டிடத்தோடு
உடன்கட்டை ஏற
அப்பாவி மனிதர்களை
அழித்தது
நியாயமா?
உயிரற்ற உடல்கள்
எரிக்கப்படும்- இல்லை
புதைக்கப்படும்
மதங்கள் ஏற்றுக்கொண்ட
மரபு இது
இங்கு
உயிரோடு உடல்கள்
சிதை வைத்து
புதைத்தது
மனித மரபை
மாற்றியமைத்த செயல்
நியாயமா?
ஏன் இந்தக்
கொலைவெறி
அடக்கி ஆள நினைக்கும்
ஆணவமா?
அடங்கமறுத்து
மாற்றுவழி தேடும்
தீவிரவாதமா?
காயம்பட்ட
சிறுபுழுகூட
திருப்பி கடிக்கும்போது
ஏனிந்த பகையுணர்வு?
ஒன்றுபடுவோம்
தீவிரவாதத்தை ஒழிக்க
பாடுபடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக