ஞாயிறு, 26 ஜூன், 2016

காலமாகாதோ!



பெருமை ஏதுமில்லா
ஒரு பேருந்து நிலையம்,
ஓருவழியா ஊருக்குள் வந்து
இளைப்பாறும் பேருந்து—அதில்
அடித்து பிடித்து ஏறும் பயணிகள்

பயணிகளின் செயலை
பார்வையால் தண்டிக்கும்
பகலவன்—பசிக்கு
பிச்சையெடுக்கும் ஒரு தாய்
பச்சிளம் குழந்தையோடு

ஆதவனும் ஆதரவு காட்டாமே
அந்தத் தாயையும் பாடாய்படுத்தி
மரணத்துக்கு வழிகாட்டுவதும்,
வெப்பம் தாங்காமே குழந்தை
வீறிட்டு அழுத காட்சியும்

பாவத்தின் உச்சமா?
பிள்ளையை கவணிக்காதது
பாசத்தின் துச்சமா?
வறுமையை போக்க
வழியேதுமில்லையா?

கலங்கித் தவிப்பவரை
கைகொடுத்து காக்காமே
கருவறைக் கடவுள்போல்
கண்டுகொள்ளாதிருந்தால்
காலமாகாதோ ஏழை உயிர்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக