தீவிரவாதக் கொலைகள்
அவனியெங்கும் பவனி வர
பட்டாசு வெடிப்பதுபோல்
வெடித்துச் சிதறும் உடல்கள்
தெறித்து உறையும்
இரத்தக் கறைகள்
நாடே சுடுகாடாய் மாறும்
அவலநிலை எங்கும்.
மரணத்தின் இரணத்தையும்
மனத்தில் மனனமாக்கி
நித்தமும் செத்து பிழைக்கும்
பாமரன் நான்-இறைவா
இப்பிறவி ஒன்றுபோதும்
மறுபிறவி உண்டென்றால்
பெண் சிசுவாய் பிறக்கவிட்டு
பிரித்துவிடு என் உயிரை.
பாவத்தை போக்கிவிடு
ஆலகால விஷத்தை
அருந்தியதுபோல.
அவனியெங்கும் பவனி வர
பட்டாசு வெடிப்பதுபோல்
வெடித்துச் சிதறும் உடல்கள்
தெறித்து உறையும்
இரத்தக் கறைகள்
நாடே சுடுகாடாய் மாறும்
அவலநிலை எங்கும்.
மரணத்தின் இரணத்தையும்
மனத்தில் மனனமாக்கி
நித்தமும் செத்து பிழைக்கும்
பாமரன் நான்-இறைவா
இப்பிறவி ஒன்றுபோதும்
மறுபிறவி உண்டென்றால்
பெண் சிசுவாய் பிறக்கவிட்டு
பிரித்துவிடு என் உயிரை.
பாவத்தை போக்கிவிடு
ஆலகால விஷத்தை
அருந்தியதுபோல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக