ஞாயிறு, 19 ஜூன், 2016

தனி மனிதனல்ல, சமுதாயம் தான்.



வரதட்சனையால
வாழ்வை இழக்கிறாயே
பெண்ணே—அதனால
பிறக்குமுன்னே பாரமானாயோ

பணத்தின் மோகத்தால
மானம் இழக்கிறானே ஆண்
விலைமகனாய்
விலை போகிறானே.

சீதனம் குறைந்ததால
சீதேவி சிறப்பிழந்தாள்
மணமேடை மதிப்பிழந்து
மூதேவியென பேரெடுத்தாள்

அக்னி சாட்சியாய்
அரங்கேறும் திருமணம்.
அடங்கிப் போவது
பத்தினியின் செயலென
பெண்களை அடக்கி வளர்ப்பதால்
பிறப்புரிமை கிடைப்பதில்லை

அடக்கி ஆளுகின்ற
ஆண்களின் ஆணவத்தால்
அவளோட இறப்புக்கும்—அதுவே
சாட்சியாய் காட்சி தரும்.

வெட்கப்பட வேண்டியது
தனிமனிதனல்ல, சமுதாயம் தான்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக