வியாழன், 21 செப்டம்பர், 2017

சாகடிக்கப்பட்டது




இசை அரங்கம் எங்கும்
நிரம்பி வழியும்
இசைப்பிரியர்கள்,
இடையில்
இம்சை படுத்த வந்ததுபோல்
இசை பாடி வந்தது ஒன்று

கச்சேரியில் இசைத்த
கல்யாணி இராக பாடலுக்கு
அரங்கம் அதிர கரவொளி
அடிபட்டு செத்தது கொசு—அதன்
சங்கீதம் அரங்கேறாமல்

சாகடிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக