திங்கள், 25 செப்டம்பர், 2017

அறம் தவற அஞ்சுவதில்லை



அரசாண்ட மன்னன்
ஒருபிடி உப்பை தனதாக்கினான்
அடுத்த நொடியில்
ஆழ்கடல் காணாமல் போனதாம்

வேலியே பயிரை மேய்ந்தால்
விளங்குமா தேசம்?
சோற்றுக்கு வழியின்றி
சாகாதோ நாட்டுமக்கள்!

பதவியில் உள்ளவர்கள்
பணத்துக்கு அடிமையானால்
நேர்மை நிலைக்குமா?
நாடு தான் முன்னேறுமா?

கட்சி நன்கொடையென
கால்பதிக்கும் கறுப்புப்பணம்
கைமாறும்போது
கலங்கமெனத் தெரியாதோ!

மானம் உள்ளவன்
மரியாதை கெடுமென பயப்படுவான்,
வாங்க துணிந்தவன்—மக்களை
வாழவிடமாட்டான்

பத்து ரூபாய் திருடியவன்
பலபேரால் அடித்து கொல்லப்படுகிறான்
பலகோடி ரூபாயை சுருட்டியவன்
நலமோடு வாழ்கிறான் நாடு கடந்து

தவறிழைத்த அரசியல்வாதிகள்
தண்டிக்கப்படாமல்
வாழ்நாளைக் கடப்பதால்

ஆண்டவனும் அறம் தவற அஞ்சுவதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக