ஒவ்வொரு செயலுக்கும்
எதிர்வினை உண்டென்று
நியூட்டன் சொன்னதுபோல்
பாவம் போக்க வடகாசியென்றால்
பாவம் சுமக்க தென்காசியோ!
மனிதனை வெட்ட
மதங்கள் போதிக்கவில்லை
பின் ஏன் இந்த அவலநிலை?
மனிதன் உணராததா—இல்லை
மனம் திருந்தாததா?
மனிதனே தெரிந்துகொள்
மதங்கள் வெவ்வேறு
கடவுள் ஒன்று தான்,
காட்டும் வழிகள் வெவ்வேறு
முடியுமிடம் ஒன்று தான்
புரிந்துகொண்டால்
புவியில் அனைவரும் சொந்தந்தான்,
மதக்கோயில்களுக்கு
ஆங்கில எழுத்துக்கள் கூட
ஆறுதான்
பறக்கும் புறாவும்—மதங்களை
பிரித்து பார்க்காமல் வசிக்கும்
எல்லா ஆலயங்களிலும்,
எல்லோரும் சம்மதமானால்
எல்லா மதங்களும் சம மதம் தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக