அரும்பான சிறுபிள்ளை
விரும்பி கேட்டதை
வாங்கிக் கொடுக்க
வசதி இல்லாத் தந்தை
உணராதக் குழந்தையோ
ஓங்கிக் குரலெழுப்பி
அழுதக் கண்ணீரின்
அளவைவிட
அதற்காக
அந்த பிள்ளையின் தந்தை
சிந்திய வியர்வையின் வடு
ஆழமானது, அதிகமானது
தந்தையோ நல்லவர்
தானுடுத்தும் ஆடை
தரமற்றபோதும்
தவறிழைக்காத நேர்மையாளர்
சமூகத்தில் அவரின்
செல்வாக்கு எப்போதும்
அம்மணமானதுபோல்
அசிங்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக