திங்கள், 25 செப்டம்பர், 2017

இலவசமா போகுதோ!




மனிதகுல பண்பின்
மான்மியம் உயர்த்திட
தர்மங்கள் செய்ய
அறநூல்கள் அறிவுறுத்தின

பண்டைய தர்மம்
பண்புள்ள மனிதநேயத்தை
குறிக்கோளாய்க்
கொண்டு விளங்கியது

தரத்தை உயர்த்தும்
தன்னிகரற்ற மனிததர்மம்
மறுமை உண்டென்று
மோட்சத்திற்கும் வழி காட்டியது

இன்றைய தர்மமோ
வீட்டின் குளிர்சாதன பெட்டியால்
வெளியே வரமுடியாமல்
வஞ்சகத்தால் வாழ்வை இழந்தது

ஏனைய தர்மங்களோ
ஏழைமக்களின் வரிபணத்தில்
வாங்கும் பொருட்களை—அவர்களிடமே
வழங்கும் வைபவமானது

இலவசமாய் மக்களுக்கு
அனைத்தும் கொடுத்தால்
நல் உழைப்பு நலிவுறாதோ!
நாடு முன்னேற்றம் காணுமோ!

இலவசங்கள் பெறும்
ஏழைகளின் உயிர்
மருத்துவ வசதியின்றி
இலவசமா போகுதோ1


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக