வறண்டு போன ஆற்றின்
வண்டலும் வாரப்பட்டதைப்போல்
பசியால் வாடும் ஏழைக்கு
நீரும் நிராகரிக்கப்பட்டால்
இருக்குமா உடலில் உயிர்?
இருப்பவர்க்கு தெரியாதா!
பாரதியைக் கூப்பிடு
பாரத மண்ணில் மீண்டும்
பிறக்கட்டும் அவர்,
தனிமனித உணவுக்குத்
தனித்து நின்று குரல் கொடுத்தவர்
தண்ணீருக்கா பின்வாங்குவார்!
அழைக்குமுன், உறுதி கொள்
தடங்கலின்றி அவருக்காவது
தண்ணீர் கிடைக்கட்டும்—அவரின்
வறண்டு போகாத குரல்
ஒலித்தால் தான்
உலகுக்கு தெரியும் நம் தாகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக