ஞாயிறு, 1 மார்ச், 2020

பாவமல்லவா!




உடல் பலமும், மூளை பலமும்
உள்ளவன் ஊழலும் புரிவான்
எதிரியை கூட நேரடியா
எதிர்கொண்டுமோதுவான்
வெற்றியும் காண்பான்

பலவீனமான கோழையோ
பறிபோகும் உரிமைக்காகக்
குழப்பங்களை உருவாக்கி
போராட்டம் புரிவான்
பொது சொத்துக்கள் பாழ்படும்

எதிர்த்து குரல் கொடுக்கும்
எதிரிகளை , பலமிக்கவன்
அழிப்பதற்காக
சமூகத்தையே அழிக்கக்கூட
சிறிதும் தயங்கமாட்டான்

பன்னெடுங்காலமாக
பாரதத்தின் பெருமைகளை
போற்றி மகிழும் நாம்
பாமர மக்களின் உயிர்களை
பரிதாபமா பறிகொடுப்பது
பாவமல்லவா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக