எங்கும் நிறைந்திருக்கும்
எம்பெருமானே !
ஏதும் அறியாதவனைப்போல்
ஆலயத்தில் அமர்ந்து கொண்டு
அமைதி காப்பது
முறையோ !
மக்கட்தொகை மண்ணில்
முதல் நூற்றாண்டில்
கால் மில்லியன்,
கி.பி.2000ல் மக்கட்தொகை
எட்டு மில்லியனாம்
உலகம் நிலைத்திருக்குமா !
பூமியின் கொள்ளளவை
புரிந்து கொண்டவர் யார்?
பறவைகளைப்போல்
பட்டறிவு உண்டா?
எடையைக் குறைக்க என்ன
செய்தோம் நாம் ?
சொத்துக்களையும்
சுகங்களையும் மட்டுமே
தேடி அலையும் மாந்தர் இனி—நீருக்கு
தெருவில் நின்று போராட
நேரமிருக்குமோ
என்னவோ?
மாயவன் அறியாதவனல்ல
மண்ணின் எடை குறைத்து
மக்களைக் காத்திட
வெள்ளம், வறட்சி போதாதென
கொரனாவை அனுப்பி—எடையை
கொஞ்சம் குறைக்க முயலுகிறானோ !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக