சனி, 28 மார்ச், 2020

தடுக்காதே அழவிடு





அனைத்துக்கும் ஆதாரமானவனே
ஆதவனே மூத்தவனே
முதலில் எழுந்து, முகம் காட்டி
மக்களுக்கு வழிகாட்டும்
மரியாதைக்குரிய மகராசனே !

கோபம் கொண்டவனைப்போல்
 கோடையில் கடுமையாய் சூடேற்றாதே
கைகூப்பி வணங்குகிறோம்
குடிக்க நீரில்லை, இருக்க வீடில்லை
எங்கே போவோம், சொல்லு

எங்களின் துயர் கண்டு
மேகக் கூட்டங்கள் கூட வானில்
 துவண்டு நிற்கின்றன
தடுக்காதே, அழவிடு
கருணை காட்டு, கலைத்து விடாதே !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக