குளிர் காலத்தில்
கீழ் இறங்கி
மலை மீது அமர்ந்து
மலையை ஒளிர வைத்து
மரியாதை பெறும்
மகுடம் சூடும்
செய் நன்றி மறவாத
செடி, கொடிகளும்
அதனோட நட்புக்கு
தங்களது பசுமையைத்
தியாகம் செய்து
பெருமை சேர்க்கும்
உச்சி வெளுத்தாலும்
கூன் விழாத மலை
இளமைப் பொலிவோடு
நிமிர்ந்து நிற்கும்—பனியை
குளிரில் அரவணைத்து
கோடையில் அருவியாக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக