சனி, 21 மார்ச், 2020

இனி ஏது குறை !




சென்னையிலிருந்து
மன்னைக்கு ஒரு பயணம்,
சாலையோர நிகழ்வுகள்
சரித்திரம் படைப்பதுபோல்
சாயம் கலையாத
சோகக் காட்சிகள்

பாசத்தை பறிகொடுத்த
பாட்டி, முதியோர் இல்லத்தில்
புலம்பும் ஒரு பரிதாபம்
நீ இருக்க ஒரு கருவறை
இருந்தது என் வயிற்றில்
நானிருக்க உன் வீட்டில்
ஒரு இருட்டறை கூடவா இல்லை

தெருவில் நிற்கும் ஆடு
தன் குட்டிக்கு பால் கொடுப்பதை
தவழ்ந்து வந்த குழந்தையொன்று
தெருவில் குப்புற படுத்து
திகைத்து இரசித்தது
தாயில்லையா?—வீட்டில்
தாயில்லையா?

அழாதே அம்மா 1
இப்ப எனக்கு பசிக்கல,
பிள்ளையின் வேதனை
பெற்றவள் அறியாததா !
கடைசி வரை உயிரோடு போராடும்
கழைக்கூத்தாடியின் பிள்ளை
அறியும் பசியின் வலி

மூன்று வயது நிறையாத
குழந்தை , பெற்றவளுக்கு
பாரமாகிப்போகும் இக்காலத்தில்
பிறந்து மூன்று வயதிலேயே
பெத்தவளுக்கு உணவளிக்கும்
பிள்ளை, தென்னம்பிள்ளையாம்
தாய்க்கும்,சேய்க்கும் இனி என்ன குறை?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக