சனி, 7 மார்ச், 2020

பள்ளியில் தீவிரவாதம்





பாடம் படிக்கும்
பள்ளிக் கூடத்தில்
பெரும் துப்பாக்கி சத்தம்
இடம் மாறி ஒலித்ததில்
இதயங்கள் துடித்தன,
பிள்ளைகளின் உயிர்கள்
பாவிகளின் கைகளில்,
பிள்ளைகளின் பரிதவிப்பால்
 பெற்றவர்கள் பதறினர்

ஓலமிட்ட துப்பாக்கி
உயிர்களை பறித்துவிட
உலகமே கண்ணீர் விட்டது
செத்துபோன செல்வங்களை
செந்நீர் விட்டு
மண்ணில் விதைத்து
மன்றாடி வேண்டினார்கள்
இறைவா
நீயாவது கண் திறந்து பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக