திங்கள், 17 ஆகஸ்ட், 2015

ஊருக்கு ஒரு தாரம்.

தாரங்கள் பலகொண்ட
இராமாயண மாமன்னன்
தசரதன் பட்ட கஷ்டம்
தரணிக்குத் தெரியாதா?
வேற்றுமதக் கதையென்று
வாசிக்க மறந்தனையோ!

மணம் பல புரிந்த
தசரத மாமன்னன்
தன் இளையதாரம் கைகேயிக்குக்
கொடுத்த வாக்கைத்
தடுக்க முடியாமல்
படுத்த படுக்கையானான்
முடிவில் மரணமல்லவா—அவனை
மாலையிட்டு மணம் புரிந்தது

ஊருக்கு ஒரு தாரமென
பாரெங்கும் பல தாரம்
உனக்கிருந்தும்—முடிவில்
வளையிலிட்டு வளைகாப்பிற்கு
போவது போல்
அன்னை வீட்டிற்கல்லவா
அழைத்து வரபட்டாய்
இனிமேல் தான்
பிறக்கும் வலி உனக்குத் தெரியும்
நீ பிறந்த கதை ஊரறியும்.


(பத்திரிக்கையில் படித்த செய்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக