திங்கள், 24 ஆகஸ்ட், 2015

எல்லோரும் வாழ்ந்திடுவார்

சிப்பிக்குள் விழும்
மழைத்துளி முத்தாகும்,
மனத்தில் புகும் நல்லெண்ணம்
வாழ்க்கையை வளமாக்கும்.

பொழியிற மழையாலே
செழிப்புறும் தாவரம்,
விதைக்கிற நல்லறிவால்
தழைத்திடும் மானுடம்.

செதுக்கிற உளியாலே
கருங்கல்லும் சிலையாகும்,
நெறி தவறா பண்பாலே
நாடே தலை வணங்கும்.

மனிதநேய அன்பாலே
மானுடம் சிறப்புறும்,
ஈகைக் குணத்தாலே

எல்லோரும் வாழ்ந்திடுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக