திங்கள், 31 ஆகஸ்ட், 2015

அதிர்ஷ்டம்

எத்தனை உறவிருந்தும்
அதிர்ஷ்டமே உனக்கீடாகுமா!
உன் ஒற்றை தரிசனத்தால்—நான்
உயராமல் போவேனோ!

வளமோடு காட்சி தரும் நீ
அறிவை துணைக்கு அழைப்பதில்லை
ஆனால் அறிவுக்கு
உன் துணை தேவை

உன்னை அடைந்தவன்
பொன்னும் பொருளும் பெற்றிடுவான்
அடையாதவனோ
தன்னம்பிக்கை இழந்திடுவான்

இருட்டில் குருடனும்
கண்ணிழந்தவனும் ஒன்றாவதுபோல்
அதிர்ஷ்டம் வந்து சேர்ந்தால்

படித்தவனும் மூடனும் ஒன்றுபோலத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக