செல்வோமென சொல்லி
வந்த செல்வமெல்லாம்
சென்றுவிட
செய்வதறியாமல்
ஒன்றுக்கும் உதவாமல்
ஊர் சுற்றி திரிந்தவரை
சுத்தி சுத்தி வந்து
சேர்த்தணைத்துக் கொண்டாயோ!
பெருமகனார் போல
பேரெடுத்த பெருமையும்
எடுத்து சொன்ன கருத்தும்
எடுபடாமல் போனதும்
உன்னால் தானே!
ஆமை நுழைந்த வீடும்
நீ நுழைந்த இடமும்
உருப்பட்டதாய்
ஒருவரும் சொல்லலையே!
வயிற்றுக்கு இல்லாமல்
வாடிய வேதனையால்
பெருமையாய் உன்பேரை
சொல்லவும் முடியலையே!
மாறி மாறி வரும்
ஏற்றமும் இறக்கமும்
இறைவனின் படைப்பென்றால்
வறுமையே
இரக்கம் உனக்கில்லையோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக