திங்கள், 31 ஆகஸ்ட், 2015

அளவுக்கு மிஞ்சினால்

அளவுக்கு மிஞ்சினால்
அமுதமும் விஷமாவதுபோல்

அதிகம் காய்ந்து கெடுத்தது
வெய்யில்

அதிகம் பெய்து கெடுத்தது
மழை

நீருக்கும் சோறுக்கும்
நாட்டில் தவிப்பவர்கள் ஏராளம்

ஊட்டச்சத்து குறைவால்
இறக்கும் குழந்தைகள் அதிகம்

மக்கட்தொகை பெருக்கம்
நம் நாட்டில் அதிகம்

கல்வி அறிவு இல்லாதவர்களும்
இங்கு தான் அதிகம்

இத்தனையும் அறியாதவர்போல்
இருப்பவர்கள் அதிகம்

ஆக்சிஜனே ஆனாலும்
அளவோடு இருப்பது அவசியம்

எல்லாமும் அழகுதான்
அதிகம் ஆகாமலிருக்கும் வரை

ஒன்று அதிகமானால்
மற்றொன்றை இழக்கநேரும்

இயற்கை வகுத்த நியதி அது
அதனை மனத்தில் கொள்ளவேண்டும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக