அளவுக்கு மிஞ்சினால்
அமுதமும் விஷமாவதுபோல்
அதிகம் காய்ந்து கெடுத்தது
வெய்யில்
அதிகம் பெய்து கெடுத்தது
மழை
நீருக்கும் சோறுக்கும்
நாட்டில் தவிப்பவர்கள் ஏராளம்
ஊட்டச்சத்து குறைவால்
இறக்கும் குழந்தைகள் அதிகம்
மக்கட்தொகை பெருக்கம்
நம் நாட்டில் அதிகம்
கல்வி அறிவு இல்லாதவர்களும்
இங்கு தான் அதிகம்
இத்தனையும் அறியாதவர்போல்
இருப்பவர்கள் அதிகம்
ஆக்சிஜனே ஆனாலும்
அளவோடு இருப்பது அவசியம்
எல்லாமும் அழகுதான்
அதிகம் ஆகாமலிருக்கும் வரை
ஒன்று அதிகமானால்
மற்றொன்றை இழக்கநேரும்
இயற்கை வகுத்த நியதி அது
அதனை மனத்தில் கொள்ளவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக