சனி, 29 ஆகஸ்ட், 2015

உபதேசம்.

மண்ணில் பிறப்பெடுத்த
மாந்தர் அனைவருக்கும்
மங்கல மொழிபோல
உபதேசம் மட்டும் தான்
கேட்காமலே கிடைக்கபெறும்

வாரி வழங்குகின்ற
உபதேசங்களெல்லாம்
வாழும் மக்களுக்கன்றி
எனக்கில்லையென

எண்ணும் அரசியலாரால்
எந்த தேசமும்
மேன்மையுற்றதாய்
மண்ணில் வரலாறில்லை

உபதேசம் செய்பவர்கள்
உலகில் பலருண்டு
உபதேசப்படி நடப்பவர்கள்
புவியில் எத்தனை பேர்?

செய்யத் தெரிந்தவன்
எதையும் சாதிக்கிறான்
செய்ய முடியாதவன்
உபதேசிக்கிறான்

சிந்திக்க தெரியாதவர்கள்
உபதேசம் செய்கிறார்கள்
சிந்தித்த பெரு மக்கள்
விஷத்தையும் சிலுவையையும்
சுமந்து மாண்டார்கள்

உன்னிடமே நீ கேள்
உன்னையே நீ புரிந்துகொள்
அதுதான் என்றென்றும் பயன் தரும்
உண்மையான உபதேசம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக