தனிமனிதன் பசிபோக்கக்
கலம் ஒன்றில் கடல் சென்று
காணும் மாந்தரிடம்
பொருளை பறித்து பிழைத்தவன்
கொள்ளையனென பேரெடுத்து
மரண தண்டனை பெறுகிறான்
கலங்கள் பலவோடு மன்னன்
படைகள் புடை சூழ பயணித்து
பல நாட்டு மக்களைக் கொன்று
அந்நாட்டு செல்வங்களை
அபகரித்து எடுத்து போகும் அரசன்
போற்றப்பட்டு வரலாறு படைக்கிறான்
என்ன நியாயம்?
அரசனின் பொற்கால வரலாறுகள்
இறந்த அப்பாவி நாட்டு மக்களின்
எழும்புக் குவியல்கள் மேல் எழுதபட்டவை
இன்று நேற்று மட்டுமல்ல
என்றென்றும் நடப்பவைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக