வியாழன், 20 ஆகஸ்ட், 2020

ஒரு கோயிலாகும்

 


இந்தியதேசத்தில்

இல்லாதவர்கள் அதிகம்

இருந்தாலும்

அந்நிய நாட்டின் பொருட்கள்

இங்கு அடியெடுத்து வைத்து

ஆசையைத் தூண்டுவதால்

 

ஏழைகளின் நிலை பரிதாபம்,

ஏக்கங்கள் அதிகரிக்கும்

ஏற்றத் தாழ்வு பெருகும்

கவலை கொள்ளும் நெஞ்சம்

கடன் பெறவும்,களவாடவும்,

கொலை செய்யவும் துணியும்

 

உயிர் வாழ உணவும், தண்ணீரும்

வசிப்பதற்கு ஒர் இடமும்

உழைப்புக்கு வேலையும் இருந்து

வாழ்க்கைத்தரம் உய்ர்ந்தால்

உள்ளத்தில் உண்மை தெய்வமாகும்

இந்திய தேசம் ஒரு கோயிலாகும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக