வியாழன், 27 ஆகஸ்ட், 2020

வாழ வைக்கும்

 

ஆட்டி படைக்கும் இறைவன்

ஆட வைத்து விளையாட

வாழும் உயிர்களுக் கெல்லாம்

வரமாகத் தந்தது இரு கண்கள்

ஒரே பணி தான் இரண்டுக்கும்

 

இரு கண்களால் பார்த்தாலும்

இல்லை ஒரு கண்ணை மூடி

மறு கண்ணால் பார்த்தாலும்

மாறுபடாது காட்சிகள்

மாயவனின் திருவிளையாடலது

 

அதுபோலத்தான் மாந்தருக்கு

அவன் படைத்த உடலும், உள்ளமும்

இவை இரண்டும் ஒற்றுமையாய்

இரு கண்களைப்போல் செயல் பட்டால்

என்றும் வாழ்வில் நிம்மதி தான்

 

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசாமல் ஒற்றுமையாய்

இரண்டும் ஒன்றையே பேசினால்

அடுத்தவரையும் வாழவைக்கும்

உன்னையும் வாழவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக