ஆட்டி படைக்கும் இறைவன்
ஆட வைத்து விளையாட
வாழும் உயிர்களுக் கெல்லாம்
வரமாகத் தந்தது இரு கண்கள்
ஒரே பணி தான் இரண்டுக்கும்
இரு கண்களால் பார்த்தாலும்
இல்லை ஒரு கண்ணை மூடி
மறு கண்ணால் பார்த்தாலும்
மாறுபடாது காட்சிகள்
மாயவனின் திருவிளையாடலது
அதுபோலத்தான் மாந்தருக்கு
அவன் படைத்த உடலும், உள்ளமும்
இவை இரண்டும் ஒற்றுமையாய்
இரு கண்களைப்போல் செயல் பட்டால்
என்றும் வாழ்வில் நிம்மதி தான்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாமல் ஒற்றுமையாய்
இரண்டும் ஒன்றையே பேசினால்
அடுத்தவரையும் வாழவைக்கும்
உன்னையும் வாழவிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக