வியாழன், 27 ஆகஸ்ட், 2020

கிரிக்கெட் வீரர்கள் தானோ !

 

இருபது இருபதில்

இந்தியா வல்லரசாகக்

கனவு காண

அழைப்பு விடுத்தவர்

அப்துல் கலாம்

முந்தைய முதல் குடிமகன்

 

முந்திக் கொண்டார்கள்

கிரிக்கெட் வீரர்கள்

இளமையும் , துடிப்பும்

அரங்கத்தையே அதிர வைத்தது

சிக்ஸர், பௌண்டரியெனபந்தை

சிதறடித்தார்கள்

 

சிதைவுறும் பாறை தான்

சிலையாகிக் கோயிலில்

விக்ரகமாகி

இறைவனாவது போல்

உலகக் கோப்பையில்

உருக் குலைந்தவர்கள்

 

இருபது இருபதில்

வெற்றி வாகை சூடி

வலம் வரும் வீரர்களாய்

வாழ்ந்து காட்டினார்கள்,

முதல் குடிமகனின் அழைப்பை

முதலில் புரிந்து கொண்டவர்கள்

கிரிக்கெட் வீரர்கள் தானோ !     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக