புதன், 5 ஆகஸ்ட், 2020

சரியாகப் பயன்படுத்துவது

மனித வாழ்க்கையை

மறை முகமாக

அன்று முதல் இன்று வரை

ஆள்வது அறிவு மட்டுமல்ல

அதிர்ஷ்டமும் தான்

 

பாமர மக்கள் தான்

பொதுவாக அதிர்ஷ்டத்தை

அதிகம் நம்புவார்கள்,

ஒரு குறிக்கோள் இருப்பதே

பெரும் அதிர்ஷ்டம் தானே !

 

பிடித்தத் தொழிலும்

பண்பு நிறை மனைவியும்

வாழ்க்கையில் ஒருவனுக்கு

வாய்க்கப் பெற்றால்அவனும்

அதிர்ஷ்டசாலி தான்

 

அதிகம் உழைப்பவரை தான்

அதிர்ஷ்டமும் நாடும்,

அதிர்ஷ்டமென்று ஒன்றுமில்லை

சந்தர்ப்பம், வாய்ப்பு இரண்டையும்

சரியாகப் பயன்படுத்துவது தான் அது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக