வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கண்ணுக்கு தெரியாமல்

 


மாந்தரை படைத்த

மாயவனுக்கு பெரும்

மன உளைச்சல்—படைத்த

மனிதர்கள் அனைவருக்கும்

மனித நேயமும் ,

மற்றவர்களை மதிக்கும்

பண்பும் அறவே இல்லையாம்

 

காலமெல்லாம் உழைத்தும்

கரும்புள்ளி விழுந்ததென

கடவுள் கலங்கி நிற்கையிலே ,

ஆலயம் வருவோரெல்லாம்

அது வேண்டும் ,இது வேண்டுமென

தொல்லைகள் கொடுத்ததால்

பொறுக்க முடியாமல்

 

எவர் கண்ணிலும் படாமல்

எங்காவது ஓடி ஒளிந்து கொள்ள

எண்ணிய இறைவன்

எங்கேயோ சென்றுவிட—கோயிலிலுள்ள

தெய்வங்கள் கற்சிலையானது

கடவுளுக்குக் கவலையில்லை இப்போ

கண்ணுக்கு தெரியாமல் வாழ்கிறார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக