வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தர வேண்டும்

 


நகைச் சுவை என்பது

நம்மை நலமோடு வைத்திருக்க

மாந்தருக்குக் கிடைத்த

மகத்தான சொத்துமானுட

வாழ்வுக்கு இயற்கை தந்த

வரப் பிரசாதம்

சோர்விலும் சுகம் தரும்

 

நகைச் சுவை உணர்வு

நமக்கு இல்லாதிருந்தால்

துன்பத்தையும், சோகத்தையும்

தாங்க முடியாம

தூக்கில் தொங்கிஉயிரை

தொலைத்து விடுவார்கள்

வாழ்வு பறிபோகும்

 

பரிசு பெறும் புலவரிடம்

பார்போற்றும் வேந்தன் கேட்டான்

புலவரே சன்மானத்தை ஏன்

சில்லரையாகக் கேட்கிறீர்

அரண்மனையில் இருக்கும்

அதிகம் பேருக்கு கையூட்டு

தர வேண்டும் மன்னா !

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக