வியாழன், 27 ஆகஸ்ட், 2020

வழி காட்டுவதற்கல்ல !

 

கொரோனாவின் தாக்கத்தால்

காட்டிலும் ஊரடங்கு

கானகத்தில் வாழும் துறவியின்

கண்களில் ஒருவரும் தென்படாததால்

துறவிக்கு மன உளைச்சல்,

தனித்து இருப்பதால் தவமிருந்துத்

தெய்வத்தைக் காண விரும்பினார்

 

கடும் தவம் புரிந்து

கைலாசம் சென்றடைந்தார்அன்று

கடவுளுக்கு அங்கு ஒரு திருவிழா

கலந்து கொள்ள நிச்சயம் வருவாரென

கடவுளைக் காண்பதற்கு ஆவலோடு

கோயிலின்வாசலில் நின்று

காத்திருந்தார் துறவி

 

சிவனும், திருமாலும்

இந்து மத பக்தர்களோடு கடந்து சென்றார்கள்

அடுத்து இயேசு பிரான் செல்ல

அவரோடு கிறிஸ்துவர்களும் சென்றார்கள்

அதன் பின் நபிகள் நாயகம் செல்ல

நடந்தார்கள்முகம்மதியர்கள்பின்பு

புத்தர் பெருமான் தன் பரிவாரத்தோடு கடந்தார்.

 

கூட்டம் அனைத்தும் கோவிலைக் கடந்தது

கடைசியாக தள்ளாடியபடி வந்தவரிடம்

காத்திருந்தத் துறவி கேட்டார்

நீங்கள் தான்  கடவுளா ?

உங்களோடு ஒருவரும் வரவில்லையேஎன்றார்

அதற்குக் கடவுள்உண்மை தான்

என்னோடு யாரும் வரவில்லைஎன்று பதிலளித்தார்

 

கடவுளைக் காட்டுவதாகக் கூறி

குழுக்களாக பிரித்து விட்டார்கள்

பிரிந்தவர்கள், பிடித்தவர்களின்

பின்னால் போய் விட்டார்கள், 

மதம் எதுவாயினும், கடவுளை

மக்களுக்கு உணரச் செய்வது

மதங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்

சொர்க்கத்திற்கு வழி காட்டுவதற்கல்ல

 

 

                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக