வியாழன், 20 ஆகஸ்ட், 2020

தர்மமாகும்


பாரம்பரிய பெருமை கொள்ளும்

பழமையான தென்னகம் ,

வள்ளுவனை முன்னிருத்தி

புகழாரம் சூட்டிக்கொள்ளும்

புராதன தமிழகம்,

சட்டமும், காவலும் மக்களுக்கு

சத்தியம் காக்கும் சாமிகள்

 

திருவிழாவில் பங்கேற்பதுபோல்

நீதியின் வளாகத்திலேயே

ஏன் இந்த வெறித்தனம் ?

அரசியலா ? இல்லை

அதிகார போராட்டமா ?

பாமர மக்களுக்கு வழிகாட்ட வந்த

படித்த நீங்கள் , நெறி படுத்தாமல்

 

வழிமாறி தாக்கிக் கொண்டால்

வேலியே பயிரை மேய்வதாகாதா ?

நியாயம் வேண்டி இனி

நீதி மன்றம் யார் வருவார் ?

நம்பிக்கை வருமா ?

நீதி மன்ற நேர்மை தான்

நிலைக்குமா?

 

மனித நேயம் மதிக்கப்படாதபோது

சட்டம், ஒழுங்கு மட்டுமல்லதமிழ்

சமுதாயமே தலை குனியும்

யார் இதற்கு பொறுப்பு ?

யார் குற்றவாளி ?

தெரியாமல் இருப்பதே

தர்மமாகும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக