பாரம்பரிய பெருமை கொள்ளும்
பழமையான தென்னகம் ,
வள்ளுவனை முன்னிருத்தி
புகழாரம் சூட்டிக்கொள்ளும்
புராதன தமிழகம்,
சட்டமும், காவலும் மக்களுக்கு
சத்தியம் காக்கும் சாமிகள்
திருவிழாவில் பங்கேற்பதுபோல்
நீதியின் வளாகத்திலேயே
ஏன் இந்த வெறித்தனம் ?
அரசியலா ? இல்லை
அதிகார போராட்டமா ?
பாமர மக்களுக்கு வழிகாட்ட வந்த
படித்த நீங்கள் , நெறி படுத்தாமல்
வழிமாறி தாக்கிக் கொண்டால்
வேலியே பயிரை மேய்வதாகாதா ?
நியாயம் வேண்டி இனி
நீதி மன்றம் யார் வருவார் ?
நம்பிக்கை வருமா ?
நீதி மன்ற நேர்மை தான்
நிலைக்குமா?
மனித நேயம் மதிக்கப்படாதபோது
சட்டம், ஒழுங்கு மட்டுமல்ல—தமிழ்
சமுதாயமே தலை குனியும்
யார் இதற்கு பொறுப்பு ?
யார் குற்றவாளி ?
தெரியாமல் இருப்பதே
தர்மமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக